
ஆமாங்கோ, அவங்க ஒரு கலக்கல் தோழி! நிறைய வலைப்பதிவுப்பிரச்சினைகளில் எங்கள் தலைகள் சென்ற வருடம் அதிகம் உருண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். காலை திடீரென்று அவரிடம் இருந்து அழைப்பு... "செல்லா தமிழச்சி பேசரேன்பா, வரமுடியுமா?" என்று. எங்கே தோழி இருக்கீங்க என்றது அவரது பதில் தூக்கிவாரிப்போட்டது. "கோவை சிறையில் தான் செல்லா என்றார்" .. அப்புறம் தான் தெரிந்தது அவர் அன்று சிறையில் பெரியார் திராவிட கழக செயலாளர் திரு கு.ராமகிரிட்டினன் அவர்களை பார்க்க மனுப்போட்டு காட்ஹ்துக்கொண்டிருந்தார்கள் என்று. உடனே புறப்பட்டேன் சிறை நோக்கி .. ஹாய் செல்லா என்று பாசத்தோடு வரவேற்றார் தோழி. பெதிக தோழர்களிடம் அனுமதி பெற்று அப்படியே என்காரிலேறி ரேஸ்கோர்ஸ் நோக்கி பயனித்தோம். வழியில் தனது ஒரு வாரகால அவசர சுற்றுப்பயணம் பற்றியும் நான் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்பது பற்றியும் பேசினோம். பின்பு இருவரும் இரண்டு குளிர்ந்த காபி சாப்பிட்டோம் (விலை அதிகமில்லை ரூபாய் 320 மட்டுமே!) . ஒரு பத்து நிமிடத்தில் செல்போன் சிணுங்கியது .. செல்லா தோழியை அழைத்துக்கொண்டு நேராக காந்திபுரம் படிப்பகம் வரவும் என்று சொன்னார்கள். உடனே புறப்பட்டு அங்கு சென்றால் பல தோழர்கள் ஆர்வமாக தோழியின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்களுடன் மக்களிடம் பெரியாரின் சிந்தனைகள், ஈழமக்களின் பிரச்சினைகள், தமிழக போராட்டங்கள், சாதிப்பிரச்சினை என்றெல்லாம் ஒருமணிநேரம் கலந்துரையாடிவிட்டு பின் தோழர்களுடன் கிராமம் பற்றி நேரில் பார்த்துவர தோழர்களுடன் சென்றார் ...
வழக்கம் போல செந்தழல் ரவி சொன்ன மாதிரி ஹைரெசோலூசன் உடன் சில புகைப்படங்கள். (போட்டோ இல்லாமல் தமிழச்சி பற்றிய பதிவா?!!)> ்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்!)


